தமிழக அரசு பட்ஜெட்: அருந்ததியர் முன்னேற்ற கழகம் வரவேற்பு

சிவகாசி, ஆக. 6:   அருந்ததியர் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது.

  நிகழ்ச்சிக்கு அதன் தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் சிவா, மாவட்டத் தலைவர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  சாத்தூர் ஒன்றியச் செயலாளர் பிச்சைமணி வரவேற்றார்.
  நிர்வாகிகள் மாரியப்பன், மாரிமுத்து உள்ளிட்டோர் பேசினர்.
  கூட்டத்தில், தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையை இந்த அமைப்பு வரவேற்கிறது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள அருந்ததியர் மக்களுக்கு இலவச ஆடுகள், கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும். அருந்ததியர் மக்களுக்கு உள்இடஒதுக்கீட்டினை கூடுதலாக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



thanks to dinamani