அருந்ததிய மக்கள் ஆலய நுழைவுக்கு தடை 3 ஆயிரம் பேர் கைது




உத்தப்புரம் அருந்ததிய மக்களின் வழிபாட்டு உரிமை யை நிலைநாட்ட ஆலய நுழைவுப்போராட்டத்திற்கு பயணப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன் னணி தலைவர்கள் 500 பேர் மதுரை மாநகரில் காவல் துறையால் கைது செய்யப் பட்டனர். உத்தப்புரம் கிரா மத்தில் காவல்துறையின் 144 தடை உத்தரவை மீறி ஆலய நுழைவுப்போராட்டத்திற்குச் சென்ற 300-க்கும் மேற்பட் டோர் கைது செய்யப்பட் டனர். இதுதவிர தமிழகத் தின் பல்வேறு முனைகளில் இருந்து உத்தப்புரத்தை நோக்கி வந்தவர்களை காவல்துறையினர் இடை யிலேயே மறித்து கைது செய்துள்ளனர்.

உத்தப்புரம் அருந்ததிய மக்களுக்கு முத்தாலம்மன் கோவில் அரசமரவழிபாடு என்பது பாரம்பரியமான தொன்றுதொட்ட உரிமை யாகும். 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பஞ்சாயத்து மூலம் தலித்துகளின் இந்த உரிமை பறிக்கப்பட்டது. கட்டப்பஞ்சாயத்து தண்ட னைக்குரியது என நீதிமன்ற மும், தமிழக அரசும் பல முறை உத்தரவிட்டபிறகும் இந்நிலை நீடிப்பது அவ மானகரமானதாகும்.

அருந்ததிய மக்கள் உள்ளிட்ட பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் பல ஆண்டு களாக வழிபாடு நடத்தி வந்த முத்தாலம்மன் கோவில் வழிபாட்டு உரிமையை கடந்த 1989 ஆம் ஆண்டு ஒரு கட்டப்பஞ்சாயத்தின் மூலம் தலித்துகளின் வழி பாட்டு உரிமை பறிக்கப் பட்டது.

சட்டரீதியான உரிமை நிலைநாட்டப்பட வேண் டும் என வலியுறுத்தியும், உத்தப்புரத்தில் அருந்ததிய மக் களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வலியுறுத்தியும், அப்பகுதி மக்கள் போராடி வருகிறார்கள். கடந்த 3 ஆண்டு களாக தமிழ்நாடு தீண்டா மை ஒழிப்பு முன்னணியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இதற்காக குரல் கொடுத்து பல போராட் டங்களை நடத்தியுள்ளன. முதல்வர் கருணாநிதிக்கும் பல கடிதங்கள் எழுதப்பட் டுள்ளன. மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்க ராஜன் தனது தொகுதி மேம் பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கியும் உத்தப்புரத்தில் நிழற்குடை அமைக்கப்பட வில்லை. நிழற்குடை அமைத் தால் தலித் மக்கள் தங்கள் முன் அமர்ந்து விடு வார்கள் என்ற சாதி ஆதிக்க உணர் வுக்கு அரசு அதிகாரமும் துணைபோவதை பல முறை சுட்டிக் காட்டியும் இதுவரை உத்தப்புரத்தில் நிழற்குடை அமைக்கப்பட வில்லை. இந்த நிலையில் மதுரையில் டி.கே.ரங்கரா ஜன் தலைமையில் நடை பெற்ற முற்றுகைப் போராட் டத்தின் போது காவல்துறை கடு மையான அடக்குமுறை யை ஏவிவிட்டது. இதன் காரணமாக பலர் படுகாய மடைந்தனர். சென்னையில் உத்தப்புரம் தலித் மக்க ளுக்கு ஜன நாயகரீதியான அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தின் போது, உத்தப்புரம் தலித் மக்களது சட்டபூர்வமான உரிமைகளை நிலைநாட்ட ஜனவரி 31 காலை 11 மணி யளவில் உத்தப்புரம் முத் தாலம்மன் கோவிலில் ஆலய நுழைவுப்போராட் டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. ஒரு மாத மாகியும் அரசு தரப்பிலி ருந்து எந்த நடவடிக்கையும், பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை.

அலுவலகம் முன் குவிந்த காவல்துறை

இந்த நிலையில் அறிவிக் கப்பட்டபடி ஜனவரி 31 ந்தேதி காலை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை மாவட் டக்குழு அலுவல கம் அமைந்துள்ள மகபூப் பா ளையத்திலிருந்து உத்தப் புரம் செல்ல ஏராளமான மக்கள் குவிந்தனர். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன் னணி மற்றும் பல்வேறு தலித் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் குழுமினர்.

அங்கு மாநகர் காவல் துறை உதவி ஆணையர் சின்னச்சாமி, துணை ஆணையர் கணேசன் தலை மையில் அப்பகுதி முழு வதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் சி.காமராஜ், தலைவர்களைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் மாநிலத்தலைவர் பி.சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட் டச்செயலாளர்கள் இரா. அண்ணாதுரை, சி.ராம கிருஷ்ணன் ஆகியோர் ஆட்சியருடன் பேச்சுவார்த் தை நடத்தினர். 144 தடை யாணை பிறப்பித்துள்ள தால் உத்தப்புரம் செல்லக் கூடாது என அவர் கூறியுள் ளார். அறிவிக்கப்பட்டபடி போராட்டம் நடைபெறும் என தலைவர்கள் அறிவித்து விட்டு அலுவலகம் வந்து உத்தப்புரத்திற்கு கிளம்பி னர்.

இப்போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். அனைத்திந்திய மாதர் சங்க மாநிலப் பொதுச்செய லாளர் உ.வாசுகி, தீண்டா மை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் பி.சம்பத், ஆதித்தமிழர் பேரவை மாநில நிர்வாகி திருச்செந் தூர் சங்கர்,மாநில இளைஞ ரணி செயலாளர் விடுதலை வீரன், இமானுவேல் பேர வை பொதுச்செயலாளர் பூ.சந்திரபோஸ், சட்டமன்ற உறுப்பினர் என்.நன்மாறன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச்செயலாளர் சி.ராமகிருஷ்ணன், மாநகர் மாவட்டச்செயலாளர் இரா.அண்ணாதுரை, மாநி லக்குழு உறுப்பினர் இரா. ஜோதிராம், வாலிபர் சங்க மாநிலத்தலைவர் முத்துக் கண்ணன், இந்திய மாணவர் சங்க மாநிலச்செயலாளர் ஜோ.ராஜ்மோகன் மற்றும் தமிழ்ப்புலிகள், பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் போராட்டத்தில் பங்கேற் கத் திரண்டனர்.

திடீர் செக்ஷன் படி தடையாம்!

கட்சி அலுவலகத்தை விட்டு வெளியே வந்தவர் களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி உத்தப்புரம் சென்றால் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். ஆகை யால், உங்களை கைது செய் கிறோம் என்று கூறினர். சட்ட ரீதியாக தலித் மக்க ளுக்கு வழங்கப்பட்ட உரி மையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட் டம் நடத்தும் எங்களால் சட்டம் - ஒழுங்கு பிரச் சனை வராது என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறி னார். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதியில் வேண்டுமானால் நீங்கள் எங்களைத் தடுத்து நிறுத் துங்கள். மதுரை நகரில் எந்த தடை உத்தரவும் இல்லாமல் தடுப்பது சட்டப்பூர்வமான தல்ல என சுட்டிக்காட்டி னார். ஆனாலும், காவல் துறையினர் 32 செக்ஷன் படி மதுரையில் கூட்டமாக சேர்வதற்கு தடைவிதிக்கப் பட்டுள்ளது என்று கூறினர். 144 தடையாணையை வீடு வீடாகத் தேடி வழங்கிய நீங்கள், இந்த ஆணையை பத்திரிகைச்செய்தியாகவோ, தலைவர்களிடமோ வழங்க வில்லை. ஆகவே, உத்தப் புரத்திற்கு நாங்கள் செல் வோம் என்ற தலைவர்களை மாநகர காவல்துறை ஆணை யாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் குவிக்கப்பட் டிருந்த காவல்துறையினர் தடுத்தனர். இதனால் திரண் டிருந்த மக்களிடம் உணர்ச் சிக்கொந்தளிப்பு ஏற்பட்டு தமிழக அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். அங்கிருந்து முழக்கங்களு டன் மகபூப்பாளையம் ஜின்னா திடலை நோக்கி அனைவரும் முன்னேறினர். அவர்களை அங்கு காவல் துறையினர் மறித்து கைது செய்தனர்.

உத்தப்புரம்

காவல்துறையின் 144 தடை உத்தரவையொட்டி உத்தப்புரத்தில் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். உத்தப்பு ரம்,எழுமலையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கோடாங்கி நாயக்கன் பட்டியில் இருந்து மாற்றுப்பாதை வழியாக எந்தவித முன்னறி விப்பு மின்றி எம்.கல்லுப்பட்டி பகுதிக்கு பேருந்துகள் திருப்பி விடப்பட்டன. இத னால், இ.கோட்டைப் பட்டி, உத்தப்புரம், எழு மலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நீண்ட தூரம் நடந்தே ஊருக்குள் வரவேண்டிய நிலை ஏற்பட்டது.

உத்தப்புரம் முத்தாலம் மன் கோவில் முன்பு ஏராள மான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். கண்ணீர்ப் புகைக்குண்டு கள், தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா வாகனம், கலவரத்தடுப்பு வாகனமான ரயாட் ஆகிய வாகனம் ஊரில் நிறுத்தப்பட்டிருந்தன.

காவல்துறை குவிப்பு

மதுரை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மு.மனோகர், விருதுநகர் மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளர் பிரபாகரன் தலைமையில் உத்தப்புரத் தில் 3 ஏடிஎஸ்பிகள், 14 டிஎஸ்பிகள், 34 ஆய்வாளர் கள், 153 சார்பு ஆய்வாளர் கள், 57 ஆயுதப்படை காவல்துறையினர், 311 சிறப்பு காவல்படையினர் உள்ளிட்ட 1787 பேர் பாது காப்பு பணியில் ஈடுபடுத் தப்பட்டனர்.

கணவாய்கேட், ராஜாக் காபட்டி, கோடாங்கி நாயக் கன்பட்டி, கச்சப்பட்டி, பொட்டல்காளியம்மன்கோவில், ஆத்தங்கரை கருப்பசாமி கோவில், மல்லப்புலம் விலக்கு, டி.கிருஷ்ணாபுரம், பாப்பிநாயக்கன்பட்டி, திருமாணிக்கம் விலக்கு, அல்லிக்குண்டனம், சின்னக் கட்டளை, மங்கள் ரேவு உள்ளிட்ட 14 இடங்களில் காவல்துறை செக்போஸ்ட் அமைத்து உத்தப்புரத் திற்குள் யாரையும் அனும திக்கவில்லை. டி.ஐ.ஜி சந் தீப்மிட்டல், மதுரை மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளர் மு.மனோகரு டன் ஆலோசனை நடத் தினார்.

குறிப்பாக, உத்தப்புரத் தில் தலித் மக்கள் வசிக்கும் பகுதிகளில் அதிக எண்ணிக் கையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். ஆனாலும், அறிவித்தபடி ஆலய நுழைவுக்காக மாலை, பழம், சூடம், சாம்பிராணி தட்டு, பொங்கல் வைக்க பொருட்களுடன் அருந்ததிய மக்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர்கள் அணி வகுத்து வந்தனர். அவர்களை ஏடிஎஸ்பி மயில்வாகனன் தலைமையிலான காவல்துறையினர் முத்தாலம்மன் கோவிலுக்கு 300 மீட்டர் தூரத்திற்கு முன் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலப்பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளர் எஸ்.கே. பொன்னுத்தாய், மாவட்ட அமைப்பாளர் எம்.தங்கராஜ், சி.சங்கரலிங்கம், பொன்னையா, உத்தப்புரம் நாட்டாண்மைகள் முத்து ராஜ், பெரியசாமி உள்ளிட்ட ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

தே.கல்லுப்பட்டி

விருதுநகர் மாவட்டத் தில் இருந்து சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜ பாளையம், சிவகாசி உள் ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து உத்தப்புரம் ஆலய நுழைவுப் போராட்டத் திற்கு வந்தவர்களை காவல் துறையினர் என்ஜிஓ காலனி யிலேயே தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். ஒவ் வொரு பேருந்தாக ஏறி இந்த சோதனை மேற்கொள்ளப் பட்டது. வேனில் வந்தவர் களை இறக்கி விடச் சொல்லி காவல்துறையினர் கட்டாயப்படுத்தினர். ஆனா லும், போராட்டத்தில் பங் கேற்றவர்கள் அங்கிருந்து நடந்தே தே.கல்லுப்பட்டி பேருந்து நிலையத்திற்கு திரண்டு வந்தனர். அங்கு திரண்டவர்களை காவல் துறை டிஎஸ்பி சி.பாலசுப்ர மணியன் தடுத்து நிறுத்தி னார். அகில இந்திய விவசா யத் தொழிலாளர் சங்க மாநிலத்தலைவர் ஏ.லாசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பி.சுகந்தி, தீண் டாமை ஒழிப்பு முன்னணி யின் விருதுநகர் மாவட் டத்தலைவர் ஏ.சேகர், செயலாளர் எஸ்.ஞானகுரு, பொருளாளர் எம்.முத்துக் குமார், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் விருதுந கர், மதுரை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 340 பேர் கைது செய்யப்பட்டனர். உத்தப் புரம் தலித் மக்களின் உரி மை மீட்பு போராட்டத்தில் பங்கேற்ற 3 ஆயிரம் பேர் மூன்று இடங்களிலும் கைது செய்யப்பட்டனர்.


உத்தப்புரம்

போராட்டக் களத்திலிருந்து....

உசிலம்பட்டி கணவாய் கேட் (எழு மலை பிரிவு) அருகே காவல்துறை யினர் குவிக்கப்பட்டிருந்தனர். அவர் கள் அவ்வழியே சென்ற எந்த ஒரு வாகனத்தையும் விட்டுவைக்க வில்லை.

உரிமைக்கான போராட்டத்திற்காக செல்பவர்களை, ஏதோ கொள்ளை யர்களை தேடுவது போல் வாகனங் களை நிறுத்தி சோதனைசெய்தனர்.

உசிலம்பட்டி உள்ளிட்ட மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து புறப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் 6 கி.மீ முதல் 8 கி.மீ தூரம் நள்ளிரவில் வயல்வெளிகளில் நடந்தே சென்று உத்தப்புரத்தை அடைந்தனர்.

ஞ நள்ளிரவில் உத்தப்புரம் சென் றடைந்த போராட்டத்தளபதிகளுக்கு தலித்மக்கள் காத்திருந்து வரவேற் பளித்தனர். கிட்டத்தட்ட ஆயிரம் பேருக்கு உணவு சமைத்து வழங்கு வதற்கான அனைத்து ஏற்பாடுகளு டன் தயார் நிலையில் இருந்தனர்.

உத்தப்புரம் ஆலய நுழைவுப் போராட் டத்தை ஒடுக்க தமிழக அரசு காவல் துறையை குவித்திருந்தது. உத்தப் புரம் கோவிலை மட்டும் பாதுகாப்ப தற்கு விருதுநகர் காவல்கண்காணிப் பாளர் பிரபாகரன் தலைமையில் கோவிலைச் சுற்றி போலீசார் குவிக்கப் பட்டனர். கோவிலுக்குள் வருபவர் களை தடுக்க போலீசார் கையில் ஆளுயுயர தடிகள் இருந்தன. காலை 8.30 மணிக்கு கோவில் சரியாக பூட் டப்பட்டிருக்கிறதா என காவல்துறை பூட்டை இழுத்துபார்த்துக்கொண்டது.

கோவிலுக்குள் மக்கள் வருவதைத் தடுக்கும் வகையில் காவல்துறை வாகனங்கள் அனைத்தும் கோவில் வாசல் முன்பு நிறுத்தப்பட்டிருந்தது. போதாதென்று சாலைதடுப்புகளை கொண்டு நட்டுவைத்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.மகேந் திரன் நள்ளிரவில் தே.கல்லுப்பட் டியிலிருந்து மேலத்திருமாணிக்கம் வரை காட்டுப்பாதைகளின் வழியே இருசக்கர வாகனத்தில் பயணித்து அங்கிருந்து 3 கி.மீ தூரம் நடந்தே உத்தப்புரத்தை அடைந்தார்.

கைது செய்யப்பட்ட அருந்ததிய மக்கள், வாகனங்களில் கைக்குழந்தைகளு டன் ஏறினர். அப்போது அவர்கள் இன்னும் எத்தனை தடைகள் வந்தா லும், எத்தனை முறை கைது செய்து சிறையில் அடைத்தாலும் எங்களது உரிமையை பெற்றே தீருவோம் என்றனர்.