தமிழ்நாடு தலித் அமைப்பு தலைவரான பசுபதி பாண்டியன் வெட்டிக்கொல்லப்பட்டார்!

தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்புத் தலைவர் பசுபதி பாண்டியன், திண்டுக்கல் அருகே ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல்லில் அவரது வீட்டுக்கு அருகே இந்தக் கொலைச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
தலித் மக்கள் அமைப்புகளில் ஒன்றான தேவந்திர குலத்தை சேர்ந்த இவர் சாதி குழு மோதல்களின் தொடர்ச்சியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.  பசுபதி பாண்டியனின் மனைவி ஜெஸிந்தா பாண்டியன் சில வருடங்களுக்கு முன்னர் தூத்துக்குடியில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
பசுபதி பாண்டியன், தென் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க தலித் தலைவராக வலம் வந்தவர்.  இவரது கொலையில் ஈடுபட்ட கும்பல் குறித்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.