தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்

நாகர்கோவில்:தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்க தலைவர் தினகரன் தலைமையில் அதன் நிர்வாகிகள் குமரி மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதா வது:
தமிழ்நாட்டில் தற் போது நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் மின்சாரம் தடை செய்யப் படுகிறது. இதனால் மாணவ மாணவியர் சிறு வியாபாரிகள், மின்சாரத்தை நம்பி தொழில் செய்பவர்கள், விவசாயிகள், நோயாளிகள் உட்பட அனைத்து பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால் தற்போது தமிழக அரசு பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் கிரைண் டர், மிக்சி, மின்விசிறி ஆகியவற்றை மின்சார தடையால் இயக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
இப்போது நடைபெறும் மின்சார தடையால் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
எனவே போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவரவும், மின்சார தடையை போக்கவும் தமிழக அரசு இலவசமாக வழங்கி வரும் கிரைண்டர், மிக்சி, மின்விசிறி ஆகியவற்றை தவிர்த்து எல்லா குடும்ப அட்டைதாரருக்கும் இலவசமாக இன்வெட்டர் கருவி வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவச பொருட்களை தவிர்த்து இன்வெட்டர் வழங்க வேண்டும்