சிறப்பு நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதாவை பதவியிலிருந்து விலகுமாறு கோரி தலித் அமைப்பு ஆர்ப்பாட்டம்..!!



பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா வளாகத்தின் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக ஜெயலலிதாவுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று பெங்களூர் நகர காவல் ஆணையரின் பிரமாணப் பத்திரத்தை கர்நாடக அரசு சார்பில் வழக்கறிஞர் அனிதா தேசாய் உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்தார்.
இதனடிப்படையில் முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்காக இன்று பெங்களூர் பரப்பன்ன அக்ரஹாரா சிறை வளாகத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கோர்ட்டில் ஆஜரானார்.
இந் நிலையில் கர்நாடகத்தைச் சேர்ந்த சமதா சைனிக் தளம் என்ற தலித் அமைப்பு கருப்புக் கொடியுடன் சிறைக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது…..
“பரமக்குடியில் தலித் வகுப்பினர் மீது தமிழக போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 தலித்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம் என்றனர். தலித்கள் மீது நடத்தப்பட்ட இந்த அராஜக தாக்குதலுக்குப் பொறுப்பேற்று முதல்வர் ஜெயலலிதா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தியவர்களைப் போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.