உத்தபுரத்தில் தலித் மக்களுக்கும் சாதி இந்துக்களுக்கும் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. அவற்றில் சில முக்கியமான அம்சங்கள்.

* முத்தாலம்மன் கோயிலுக்குள் தலித்துகள் நுழைய அனுமதி

* 22 ஆண்டுகளாக மறுக்கப்பட்டிருந்த அரசமர வழிபாடு அனுமதி

* தலித் மக்கள் முழு உரிமையுடன் பொதுப்பாதையைப் பயன்படுத்தலாம்.

* தலித் மக்கள் மீதான அனைத்து வழக்குகளும் வாபஸ்

* இரு சாதியும் அமர்வதற்கான பொதுவான நிழற்குடை.

இந்த ஒப்பந்தம் ஏற்படுவதற்குக் காரணமாக இருந்த கலெக்டர் சகாயம், எஸ்.பி. அஸ்ரா கார்க் மற்றும் போராட்டத்தை முன்னெடுத்த அனைத்து அமைப்புகளையும் வாழ்த்துவோம்