புதுச்சேரி, நவ. 12: சந்தைபுதுக்குப்பம் கலவரம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இந்த அமைப்பின் தலைவர் தலித் சுப்பையா, பொதுச்செயலர் கோ. ராமசாமி ஆகியோர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: சந்தைபுதுக்குப்பம் தலித் மக்கள் பள்ளி, ரேஷன் கடை உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியத் தேவைகளுக்கும் கிராமப் பகுதியைச் சார்ந்தே இருக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில் 23.10.2011-ல் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் நடந்து கலவரம் ஏற்பட்டது. தலித் மக்களுக்கு நில உடமையாளர்கள் வேலை கொடுக்காமல் இருக்கின்றனர். மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதி திட்டத்தின்கீழ் வேலையும் வழங்கப்படவில்லை. ரேஷன் கார்டுகளை துணை ஆட்சியரிடம் தலித் மக்கள் ஒப்படைத்துவிட்டனர். ஊரின் உள்ளே ரேஷன் கடை இருப்பதால் அங்கு சென்று ரேஷன் பொருள்களை வாங்க முடியவில்லை. அதனால் குழந்தைகள், முதியோர் உள்ளிட்டோர் பட்டினியால் பரிதவிக்கின்றனர். போதாக்குறைக்குக் கடுமையான தொடர்ச்சியான மழையால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர்.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் இரு தரப்பினரையும் அழைத்து நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகும் அங்கு அமைதி ஏற்படவில்லை. காவல்துறையினர் இரு தரப்பினர் மீதும் வழக்குப் போட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள 3 தலித் இளைஞர்களை காவல்துறையினர் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர். எதிர் தரப்பில் யாரும் கைது செய்யப்படவில்லை.
இந்தக் கலவரத்தின் மீது உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். அதில் மனித உரிமை கமிஷன், எஸ்.சி., எஸ்.டி. கமிஷன் போன்ற அமைப்புகளின் உறுப்பினர்களும் இடம் பெற வேண்டும். துணை ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள ரேஷன் கார்டுகளை மீண்டும் மக்களிடம் ஒப்படைக்க வேண்டும். பிரச்னைகள் தீரும்வரை தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்ய வேண்டும். தாக்குதலில் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்குச் சட்டரீதியான நிவாரணம் வழங்க வேண்டும். அங்கு அமைதியான, நல்லிணக்கத்தை ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
கோவிலினுள் சென்ற தலித் மக்கள்
தமிழக ஊதாபுரம் பகுதியில் உள்ள தலித் இன மக்கள், இரண்டு தசாப்தங்களின் பின்னர், நேற்றைய தினம் ஊர் ஆலயத்துக்குள் சென்றுள்ளனர்.
தலித் இன மக்களை ஊர் ஆலயத்தினுள் செல்லக் கூடாது என உயர்ந்த வகுப்பு இனத்தவர்கள் என கூறிக் கொள்பவர்கள் தடை விதித்து வந்தனர்.
அவர்கள் இறுதியாக கடந்த 1989ம் ஆண்டு இந்த ஆலயத்தினுள் சென்றதாக, அவர்களின் தலைவர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் உயர்ந்த வகுப்பு இனத்தவர்களால், தலித் இன மக்கள் கோவிலினுள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு வந்தது.
எனினும் நேற்றுடன் அந்த தடை மீறப்பட்டுள்ளது.
அவர்கள் கோவிலினுள் சென்று வழிபடுவதற்கு காவற்துறையினர் பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.
எவ்வாறியனும், உயர்ந்த வகுப்பு இனத்தவர்கள் என கூறிக் கொள்பவர்கள், தலித் மக்கள் கோவிலினுள் புதுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவிலுக்கு வெளியில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தனர்.
திருவாரூரில் தலித் நபர் மீது தாக்குதல்
திருவாரூர் அருகே தலித் சமூகத்தைச் சேர்ந்தவரைத் தாக்கிய ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேந்திரன், தேர்தல் பகை காரணமாக தமிழ் அழகன் என்பவரைத் தாக்கியுள்ளார்.
இதுகுறித்து காவல்துறையி;டம்; புகார் அளிக்கப்பட்டது. அப்போது சாதாரண வழக்கில் ராஜேந்திரன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென்றும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் வலியுறுத்தினர்.
இதற்காக குடவாசல் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
அப்போது தமிழ் அழகனைத் தாக்கிய ஊராட்சி மன்றத் தலைவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென முழக்கங்கள் எழுப்பினர்.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேந்திரன், தேர்தல் பகை காரணமாக தமிழ் அழகன் என்பவரைத் தாக்கியுள்ளார்.
இதுகுறித்து காவல்துறையி;டம்; புகார் அளிக்கப்பட்டது. அப்போது சாதாரண வழக்கில் ராஜேந்திரன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென்றும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் வலியுறுத்தினர்.
இதற்காக குடவாசல் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
அப்போது தமிழ் அழகனைத் தாக்கிய ஊராட்சி மன்றத் தலைவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென முழக்கங்கள் எழுப்பினர்.