மாயாவதி தோல்வியும் தலித் அரசியலும்:ஒரு ஆய்வு
உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் தோல்வி ஒரு புறமிருக்க, அம்மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தோல்வி, தலித் அரசியல் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. 2007ம் ஆண்டு அம்மாநிலத்தில் மாயாவதி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தபோது, இந்தியாவில் தலித் அரசியலின் வெற்றி வீராங்கனையாக அவர் பார்க்கப்பட்டார். ஆனால் ஐந்தாண்டுகள் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்தும் அவர் தனது சமூக அரசியலின் ஆளுமையை அம்மாநிலத்தில் நிலை நிறுத்திக்கொள்ள முடியவில்லை என்பது எதைக்காட்டுகிறது என்று தலித் எழுத்தாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் தமிழோசையிடம் தெரிவித்த கருத்துக்களை இங்கே கேட்கலாம்
தலித் மக்களுக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் செ.கு.தமிழரசன் பேட்டி
வேலூர்: தலித் மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தனியாக பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என்று செ.கு.தமிழரசன் கூறினார்.
வேலூரில் இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் செ.கு.தமிழரசன் எம்எல்ஏ நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுகவை இந்திய குடியரசு கட்சி ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ளும். தனியார் துறையில் இடஒதுக்கீடு வழங்க அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர தேசிய அளவில் கருத்து ஒற்றுமை ஏற்படுத்தப்படும் என்ற மத்திய அரசின் வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. ஆகவே சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகள் எந்த அளவுக்கு ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பயனை அளித்துள்ளது என்பது குறித்த வெள்ளை அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்.
ஆகவே, மத்திய மற்றும் மாநில அரசுகள் தலித் மக்களுக்கு தனியாக பட்ஜெட் போடும் மரபை உருவாக்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்கான நிதிஒதுக்கீடு செலவழிக்கப்படுவது குறித்து அறிய முடியும்.
வேலூரில் இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் செ.கு.தமிழரசன் எம்எல்ஏ நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுகவை இந்திய குடியரசு கட்சி ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ளும். தனியார் துறையில் இடஒதுக்கீடு வழங்க அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர தேசிய அளவில் கருத்து ஒற்றுமை ஏற்படுத்தப்படும் என்ற மத்திய அரசின் வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. ஆகவே சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகள் எந்த அளவுக்கு ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பயனை அளித்துள்ளது என்பது குறித்த வெள்ளை அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்.
ஆகவே, மத்திய மற்றும் மாநில அரசுகள் தலித் மக்களுக்கு தனியாக பட்ஜெட் போடும் மரபை உருவாக்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்கான நிதிஒதுக்கீடு செலவழிக்கப்படுவது குறித்து அறிய முடியும்.
தலித் வாலிபரை அடித்ததாக உ.பி. முன்னாள் அமைச்சர் மீது வழக்குப் பதிவு
ஓரை (உத்தரபிரதேசம்), மார்ச் 3 -
தலித் வாலிபரை அடித்ததற்காக பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் எம்.எல்.ஏ.வும் உத்தரபிரதேச மாநில முன்னாள் அமைச்சருமான ஹரிஓம் உபாத்யாய் மீதும், அவருடைய நண்பர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ப்ஹூல் சிங் என்பவர் ராம்பூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த புகாரில்- உத்தரபிரதேச மாநில முன்னாள் உள்துறை அமைச்சருமான ஹரிஓம் மற்றும் அவருக்கு நெருங்கியவர்க்களுமான யோகேஷ் திவிவேதி மற்றும் அருண் திக்ஷி ஆகியோர் நேற்று இரவு தன்னை தாக்கினார்கள் என்றும் தன்னுடைய மதத்தைப் பற்றி இழிவாகப் பேசினார்கள் என்றும் குறிப்பிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே, குற்ற நடவடிக்கைகளுக்காக மாநில அமைச்சரவையிலிருந்து கடந்த ஆண்டு உபாத்யாய் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தலித் வாலிபரை அடித்ததற்காக பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் எம்.எல்.ஏ.வும் உத்தரபிரதேச மாநில முன்னாள் அமைச்சருமான ஹரிஓம் உபாத்யாய் மீதும், அவருடைய நண்பர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ப்ஹூல் சிங் என்பவர் ராம்பூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த புகாரில்- உத்தரபிரதேச மாநில முன்னாள் உள்துறை அமைச்சருமான ஹரிஓம் மற்றும் அவருக்கு நெருங்கியவர்க்களுமான யோகேஷ் திவிவேதி மற்றும் அருண் திக்ஷி ஆகியோர் நேற்று இரவு தன்னை தாக்கினார்கள் என்றும் தன்னுடைய மதத்தைப் பற்றி இழிவாகப் பேசினார்கள் என்றும் குறிப்பிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே, குற்ற நடவடிக்கைகளுக்காக மாநில அமைச்சரவையிலிருந்து கடந்த ஆண்டு உபாத்யாய் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.