அருந்ததியர் உள் ஒதுக்கீடு அமலாகிறதா? ‘பானைச்சோறின் பருக்கை!’

‘சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்’ என்ற உடன் பிறப்புகளின் தாரக மந்திரம் கால மாற் றத்தில் `சொல்லாததையும் செய்வோம்` என்று மருவியிருக்கிறது. ஆமாம், உண் மையில் கழக ஆட்சியில் எங்குமே அவர் கள் சொல்லாததைச் செய்வதுதான் அதி கம். ஏராளமான உதாரணங்கள் உண்டென் றாலும் பானைச் சோற்றின் பருக்கைபத மாய் அருந்ததியர் உள் இடஒதுக்கீடு படும்பாட்டை எடுத்துக் கொள்ளலாம்.

உள் இட ஒதுக்கீடு

காலம் காலமாய் ஒடுக்கப்பட்ட, இழிவுகளைச் சுமந்தே பழக்கப்பட்ட, அருந்ததியர் மக்களுக்கு ‘தாழ்த்தப் பட்டோர் ஒதுக்கீட்டில் உள் இட ஒதுக் கீடு வேண்டும்‘ என்ற கோரிக்கை சமீப ஆண்டுகளில் எழுப்பப்பட்டது. அத னைக் கையிலெடுத்து மார்க்சிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் அருந்ததியர் அமைப்புகள் தீவிரமாகக் களமிறங்கியதும் கோரிக்கை வலுவடைந் தது. அரசு ஜனார்த்தனன் கமிஷனை அமைத்து ஆய்வு செய்தது. தாழ்த்தப் பட்டோரின் 18 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் 3 விழுக்காடு அருந்ததியர் மக்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவதாக 2009 மார்ச் சில் அரசு அறிவித்தது. அதே ஆண்டு மே-29ல் அரசாணை பிறப்பித்தும் அமல் படுத்தியது. தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை (ஞ & ஹசு (மு)) தான் அரசாணை எண் : 65ம் வெளி யிட்டது. உடனே தமிழக முதல்வர் ‘உள் ஒதுக்கீடு கோரிக்கையை திமுக தலை வர் கருணாநிதி முதலமைச்சர் கருணா நிதியிடம் கோரிக்கை வைத்தார், முதல மைச்சர் கருணாநிதி நிறைவேற்றினார், என்று தனக்குத் தானே ஏற்பாடு செய்த பாராட்டு விழாவில் தன் முதுகில் தானே தட்டிக் கொடுத்துக் கொண்டார். வெள் ளைக் காகிதத்தில் ‘தேன்‘ என்று எழுதி னால் இனித்து விடுமா? ஆம், இன்றைய நடப்புகள் அப்படித்தான் ஆகிப் போனது.

மின்வாரிய ஷாக்!

உள்ஒதுக்கீடு அமலான அடுத்த மாதமே (ஜூன்-16, 09) தமிழ்நாடு மின் சார வாரியம் 1100 தொழில் நுட்ப உதவி யாளர் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தியது. ஆனால் வேலை வாய்ப்பகத்தின் அறிவிப்பில் எஸ்.சி., அருந்ததியர் (எஸ்.சி.(ஏ).,) பிரிவு கோரப் படவில்லை. இதனை எதிர்த்து கோவை இளைஞர் சக்திவேல் உயர்நீதி மன்றத் தில் வழக்குப் போட்டார். நீதிபதி சந்துரு வும் (8.12.09) அருந்ததியர் உள்ஒதுக் கீட்டுப்படி தேர்வு செய்யவேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார். அதன் பின்னர் நீதிபதி வி. தனபாலனும் ஏப்ரல் 15, 2010ல் அதே போல் மின்சார வாரியத்திற்கு உத்தரவிட்டார். ஆனால் நீதிமன்ற உத்தரவும் கடலில் கரைத்த பெருங்காயம்தான். முன்னதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளித்த பதிலில் தமிழ்நாடு மின்சார வாரியம் ‘வேலைவாய்ப்பகம் அளித்த பட்டியலில் எஸ்.சி.(ஏ) என்று தனியாக குறிப்பிட வில்லை, எனவே அருந்ததியருக்கான பட்டியல் தர இயலவில்லை என்று பதி லளித்துள்ளது. உண்மையென்னவென் றால் 1100 பேரில் 33 அருந்ததியர் பணி யிடங்கள் மின்வாரியத்தால் நிரப்பப்பட வில்லை, அங்கு உள்ஒதுக்கீடு கண்டு கொள்ளப்படவே இல்லை என்பதுதான். இது நீதிமன்ற அவமதிப்பும்கூட என் பதும் உண்மை.

அரசு போக்குவரத்து அநீதி!

அடுத்து தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகம் மாநிலம் முழுவதும் 250 உதவிப் பொறியாளர் பணியிடங்களை நிரப்ப மே-7,2010ல் நேர்முகத்தேர்வை நடத்தியது. இதில் எஸ்சி(ஏ) பிரிவில் மட் டும் எட்டு பேர் நிரப்பப்பட்டிருக்க வேண் டும். ஆனால் இங்கும் உள்இட ஒதுக்கீடு கணக்கில் கொள்ளப்படவில்லை. அதை விடக் கொடுமை, தன்னை நேர்முகத் தேர்வுக்கு அழைக்க வேண்டும் என்ற உத்தரவை உயர் நீதிமன்றத்தில் இந் தாண்டு மார்ச் 10ல் கோவையைச் சேர்ந்த லெனின் பெற்றார். ஜூலை-12ல் கோவை யில் நேர்முகத் தேர்விலும் பங்கேற்றார். சென்னை தரமணியில் உள்ள க்ஷடியசன டிக ஹயீயீசநனேடிளாiயீ கூசயiniபே உநவேசந ம் அக்டோ பர் 5ம் நாள் சான்றளித்துவிட்டது. ஆனா லும் கோவை அரசுப்போக்குவரத்துக் கழகம் 17 உதவிப் பொறியாளர்களில் 16 பேரை மட்டும் பதவியமர்த்திக் கொண் டது. எஸ்.சி.(ஏ). பிரிவில் சேர்க்க வேண் டிய லெனினை மட்டும் கடந்த எட்டு மாதங்களாக அல்லாட விடுகிறது. தமிழ கம் முழுவதும் நிரப்பவேண்டிய எட்டு அருந்ததியர் பணியிடங்களும் நிரப்பப் படவில்லை என்பதே உண்மை.

மாநகராட்சி என்ன செய்யும்?

இப்போது கோவை மாநகராட்சி, 40 இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் பணியிடங்கள் நிரப்ப இருக்கிறது. இதற் காக கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் கடந்த மாதம் 30 மற்றும் டிசம்பர்-6 ஆகிய இரு தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அறிவிப்பு வெளி யிட்டது. முதல் அறிவிப்பில் ஏனோ பி.சி. (எம்) (முஸ்லிம் உள் இடஒதுக்கீடு) கேட் கப்பட்டது, அடுத்த அறிவிப்பில் அதுவும் இல்லை. அருந்ததியர் ஒதுக்கீடு எஸ்.சி.(ஏ) பிரிவு இரண்டிலுமே இல்லை. மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, “பணியிடங்கள் நிரப்ப வேண்டி யது குறித்து மட்டுமே வேலை வாய்ப்பகத் திற்கு தெரிவிப்போம். அவர்கள் தான் தகுதி இடஒதுக்கீடு என ஆராய்ந்து நிய மன பட்டியலை அளிப்பார்கள்” என்று நழுவினர். கோவை மாவட்ட வேலை வாய்ப்பக உதவி அலுவலர் மூர்த்தியிடம் கேட்டபோது, “எல்லாம் சட்டப்படி சரி யாகச் செய்வோம், தவறு நடக்க வாய்ப்பே இல்லை, முதல் முன்னுரிமை ளஉ(ஹ) தானே வரும்! அறிவிப்பில் இல்லாவிட் டால் என்ன?” என்கிறார்.

கேள்விகளின் அணி வகுப்பு

ஆனால் கேள்வி என்னவென்றால் அருந்ததியர் உள்ஒதுக்கீட்டுக்கு ளஉ(ஹ) என்று தனியாகப் பதிவு செய்கிறது வேலை வாய்ப்பகம். அதேபோன்று சான்றிதழ் சரி பார்ப்பு அழைப்பில், அறிவிப்பில் குறிப் பிடாவிட்டால் எப்படி பங்கேற்க முடியும்? தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக உதவிப் பொறியாளர் நியமனம், தமிழ்நாடு மின்சார வாரிய தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களில் ளஉ(ஹ) குறித்த கேள் விக்கு, ‘வேலை வாய்ப்பகம் தனியாக குறிப்பிடவில்லை. எனவே பட்டியல் தரமுடியாது’ என்று ஏன் சொல்கிறார் கள்? உள் இடஒதுக்கீட்டை அமல் படுத்த மறுப்பது எந்தத்துறை? அரசின் ஆணை, உயர்நீதிமன்ற உத்தரவு என்று எதுவென்றாலும் அதைச்செல்லாக் காசாக்குவது யார்? அதிகாரவர்க்கமா? தமிழக அரசா? ஆண்டாண்டு காலமாய் அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட அருந்ததி யர் சமூகம் இன்னும் ஏன் அலைக் கழிக்கப்படுகிறது? என்று கேள்விகள் அணிவகுக்கின்றன. இப்போதுதான் கழகக் கண்மணிகளின் ‘சொல்லாததை யும் செய்யும் தாரக மந்திரம் அமலாவது நமக்குப் புரிகிறது.

ஏட்டுச்சுரைக்காயோ?

செருப்புத் தைத்தல், துப்புரவுசெய் தல், சாக்கடைச் சுத்தம், பிணம் எரித்தல் போன்ற இழி தொழில்தான் அருந்ததியர் தலையெழுத்து, வேறுபணிக்கு விடமாட் டோம் என்று அதிகாரிகள் சதி செய்கிறார் களோ? அரசையும் ஏமாற்றுகிறார்களோ? என்று எண்ணவும் தோன்றுகிறது. ‘ஏட்டுச்சுரைக்காய் எப்படி கறிக்கு உத வாதோ’ அப்படி அருந்ததியருக்கும் 3 விழுக் காடு உள் இடஒதுக்கீடு என்று அறிவித் தால் மட்டும் போதாது. தொடர்ந்து அரசு நிர்வாகங்களோடு சட்டரீதியாகப் போரா டும் கோவை சிங்கையைச் சேர்ந்த லெனின் “போங்க சார், உள்ஒதுக்கீடு என்பதெல்லாம் சும்மா, வெறும் டிராமா” என்று வேதனையில் கொந்தளிக்கிறார். க்ஷநு.,(ஆநாயniஉயட நுபேநநேநசiபே) என்ற தர மான தொழிற்படிப்பு, தொழிற்பயிற்சி பழகு நர் பட்டயம் பெற்ற தனக்கே வேலை இல்லை. அரசு நிர்வாகங்களுடன் போரா டியும் நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்றும் பயனில்லை என்று வேதனையோடு அர சின் உள்ஒதுக்கீடு அமலாகாதததின் கண் முன் காட்சியாகவும் நம்முன் நிற்கிறார்.

சத்திய ஆவேசம்!

இந்த நிலையில் உள்ஒதுக்கீட்டுக் காகப் போராடிய தீண்டாமை ஒழிப்பு முன் னணி, அதை அமலாக்கவும், ‘உள்ஒதுக் கீட்டுக்கு சட்டப்பூர்வமான பாதுகாப்பு வழங்கு!’ என்ற முழக்கத்தோடு தமிழகத் தின் சென்னை, கோவை, மதுரை உள் ளிட்ட 20 மையங்களில் டிசம்பர்-19ல் ஆர்பாட்டங்களை நடத்த உள்ளது.

தமிழகத்தில் இதுநாள் வரை அரசு பதவி, பணியிடம் எங்கும் ஒடுக்கப்பட்ட தலித் அருந்ததியர் தங்கள் உரிமை கேட்டு நிற்கிறார்கள். கடந்தாண்டு மருத் துவ கல்விக்கு 56 பேர், பொறியியல் படிப் புக்கு 1,165 பேர் அருந்ததிய மாணவர்கள் காலடி எடுத்து வைத்தது மகிழ்ச்சிதான்.

அதே நேரத்தில் கடந்த 2009 மார்ச் சுக்குப்பின் மின்வாரிய தொழிநுட்ப உத வியாளர், அரசுப் போக்குவரத்து உதவிப் பொறியாளர், காவலர்கள் தேர்வு என்ற அரசுத்துறை பணியிடங்களில் ஏன் உள் ஒதுக்கீடு அம லாகவில்லை? என்று சத் திய ஆவேசத் தோடு மார்க்சிஸ்ட் கட்சி யும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் கேட்கும் கேள் விக்கு அரசு பதில் சொல் லியே ஆக வேண்டும்.

“ ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
   வேந்தனும் வேந்து கெடும்”                       - குறள்

என்ற அய்யனின் வாக்கும் ஆட்சி யாளர்கள் அறியாததல்ல. நெடுங்காலமாய் நீதிகேட்டு நிற்கும் அருந்ததியருக்கு உள்ஒதுக்கீட்டை முறையாக அமலாக்கு வது அரசின் கைகளில் தான் உள்ளது. செய்வார்களா? (

-எம்.சக்தி