அருந்ததியர் அவலமும் தூங்கா நகரின் துயரமும்


மதுரை, தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க நகரங்களில் ஒன்று. பல்வேறு மத, இன, மொழியாளர் கலந்து வாழும் நகரம். கோயில் நகரம் என்று தமிழக அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட மதுரைக்கு தூங்கா நகரம் என்ற சிறப்பும் உண்டு. பாண்டியர்கள், நாயக்கர்கள், முஸ்லிம்கள், ஆங்கி லேயரின் ஆட்சிக் காலங்களில் மதுரை முக்கிய இடம் பெற்றுள்ளது. எனினும், சமூக வாழ்வில் ஏற்றத் தாழ்வுகளும், தீண்டாமையும் அதன் கொடுமைகளும் மதுரையின் நெடுந் தொடரான காலபடித்தரத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கிறது.
மதுரையின் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் நுழைய தீண் டத்தகாத சமூகத்தவர்களுக்கு அனுமதி இல்லாமல் இருந்தது. அந்த காலக்கட்டத்தில்   ஏ.வைத்தியநாத ஐயர், தலித் மக்களை வெற்றிகரமாக கோயிலுக்குள் வழிநடத்திச் சென்ற வர். இச்சம்பவம் நடைபெற்று 70 வருடங்கள் உருண்டோடிய பின்னரும் உண்மையான சமூக விடுதலை என்ப தும் தலித் சமூகத்திற்கு எட்டாக் கனியாக உள்ளது.

மதுரை மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் தீண்டாமை இன்னும் உயிர்வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. பல தலைமுறைகளாக தொடரும் தீண்டாமை கொடுமை பற்றி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்ற அமைப்பு 21 தலித் குடியிருப்புகளை ஆய்வு செய்து அறிக்கை ஒன்றினை தயாரித்திருக்கிறது.

தலித்கள் தனிமைப்படுத்தப்பட் டுள்ள கிராமங்களில் இந்த பாகு பாட்டை அனுபவிக்கிறார்கள். இச் செயல் குறைந்தும் வருகிறது என்ற உண்மையை இந்த அறிக்கை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறது.

இந்தப் பிரச்சினையில் இடதுசாரி கள் தவிர்த்து அனைத்து அரசியல் கட்சிக்கும் ஆழ்ந்த மௌனம் சாதிப்பதையும் இந்த அறிக்கை குறிப்பிட்டுச் சொல்கிறது. இந்த ஆய்வறிக்கை 2009 டிசம்பர் 18&ம் தேதியில் வெளியானது.

ஆரோக்கியமின்மை (ஜீஷீஷீக்ஷீ லீமீணீறீtலீ) மட்டகரமான வாழ்க்கை முறை இவற்றால் மதுரை மாவட்ட தலித் மக்கள் சூழப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முறையான குடியிருப்பு வசதிகள் கிடையாது. கல்விக்கான முறையான சூழல் கிடையாது, வேலை வாய்ப்புகள் கிடையாது, சுய வேலைவாய்ப்புக்கான நிதிவுதவிகள் பெற வழியில்லை, முதியோர் ஊதியம் உள்ளிட்ட நல உதவிகள் பெறுவதில் தாமதம் உள்ளிட்ட சிக்கல்கள் அவர்கள் வாழ்க்கை முன்னேற்றத் திற்கு பெரிய தடைகளாக உள்ளன என்கிறார் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பி.சம்பத்.

முப்பது வருடங்களுக்கு மேலாக இந் நகரத்தில் வாழ்ந்து வரும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலப்பட்டா வழங்கவில்லை என்பது மற்றொரு பிரச்சினை சுடுகாடுகள் மற்றும் செருப்பு தைக்கும் சுகாதாரம் தொடர்பான பணியில் ஈடுபடும் அருந்தியர் அவலத்தையும் இந்த அறிக்கை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

மதுரை மாநகரில் தலித்துக்கள் சந்திக்கும் மற்றுமொரு முக்கியப் பிரச்சினை குடியிருப்பு. மதுரையின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதத்திற்கு குறைவான விகிதத் தில் தலித்துக்கள் உள்ளனர். இவர்கள் அருள்தாஸ்புரம், செல்லூர், முனிசிலை, திடீர் நகர், சதாமங்கலம், அனுப்பானடி, வில்லாபுரம் உள்ளிட்ட 19 பெரிய தொகுப்பு சேரிகளில் வசிக்கின்றனர். இவை நகரத்தின் 72 நகர்மன்ற தொகுதிகளை உள்ளடக்கி யுள்ளன. இவைகளில் ஒரு தொகுதி நகர மேயரையும், துணைமேயரையும் தந்துள்ளது.

அருந்ததியர்கள் தெலுங்கு மொழி பேசுகின்றனர். இவர்கள், விஷ்வநாத நாயக்கரின் ஆட்சி காலத்தில் (16&ம் நூற்றாண்டு) மதுரைக்கு வந்துள்ளனர். மதுரையின் புறநகர் பகுதிகளில் தங்கியுள்ளனர். நாயக்கர்கள் காலத்தில் (16 மற்றும் 17&ம் நூற்றாண்டில்) மேலவாசல், கீழவாசல், தெற்கு வாசல், வடக்கு வாசல் ஆகிய நான்கு முக்கிய நகரின் நுழைவாயில்களுக்கு வெளியே தலித்துகள் வசித்துள்ளனர். பழங்கால வருவாய் பதிவேட்டில் “பள்ளர் மயானம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மயானம் பழங்காநத்தம் அருகே இருந்துள்ளது.

சேரிவாழ் மக்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையினர் சுகாதாரப் பணியில் (sணீஸீவீtணீக்ஷீஹ் ஷ்ஷீக்ஷீளீs) உள்ளனர். இவர்கள் அனைவரும் அருந்ததி சாதிப்பிரிவினர். சாதிப் பட்டியலில் ஆக கீழ்மட்டத்தில் இடம் பெற்றுள்ளனர். மற்றவர்கள் உடல் உழைப்பு செய்யும் தினக்கூலி தொழிலாளர்கள், குப்பை பொறுக்கு பவர்கள், பாதைசாரி வியாபாரிகள் (லீணீஷ்ளீமீக்ஷீs) சுமை தூக்குபவர்கள், ரிக்ஷா இழுப்பவர்கள்.

தலித்துகளின் வீதிகள் கூட சாதி வாரியாக வரையறுக்கப்பட்டுள்ளன. தத்தனேரி பகுதியில் தெருக்களுக்கு கூட பட்டியல் சாதியினரின் துணை பிரிவுகளின்¢ கீழ் பெயரிடப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வமாக மாற்றுப் பெயர்கள் இடப்பட்டுள்ளபோதும், பொதுவிநியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வழங்கியுள்ள குடும்பஅட்டைகளில் குறிப்பிடப் பட்டுள்ளபடி சில பொது வினியோக கடைகள் “ஹரிஜன் கூட்டுறவு நியாய விலை கடைகள்” என்று பெயரிடப் பட்டுள்ளன.

தலித்துகள், தங்கள் சொந்த சமூகத்தவர்களின் அண்டையிலேயே வசிக்க விரும்புகின்றனர். தங்கள் வாழ்விடங்களுக்கு வெளியே குடியேறுவது பாதுகாப்பாக இருக்காது என்று எண்ணுகின்றனர். நகர்ப்புற விரிவாக்கத் திட்டமும் இவர்களின் அச்ச உணர்வை போக்கவில்லை. இத்திட்டத்தினால் தலித்துகளுக்கு எந்தவித ஆதாயமும் இல்லை என்கிறார். தென்னிந்திய வரலாற்று பேரவையின் பொது செயலாளர் பி.எஸ்.சந்திரபாபு.

குடிநீர் வினியோக பற்றாக்குறை, மற்றும் சுகாதார வசதிகள் பற்றாகுறை, பெருகும் மக்கள் தொகை அடர்த்தி, உள்கட்டமைப்பு வசதியின்மை ஆகியவை இதர பிரச்சினைகள். நெருக்கடியான இந்த சேரிப்பகுதிகளில் தலித்துகள் பன்றிகள் மற்றும் நாய்களுடன் தான் வசிக்க வேண்டியுள்ளது. இந்த குடியிருப்புகள், தமிழ்நாடு சேரி பகுதிகள் (மேம்படுத்தல் மற்றும் சுத்தப்படுத்தல்) சட்டம் 1971 பிரிவு 3-&ன் கீழ் பொருந்திப்போகிறது.

அவை (1) எந்த வகையிலும், மனிதர்கள் வாழ்வதற்கு பொருத்த மற்றவை.

(2) இடிபாடுகள், அதிக நெருக்கடி, தவறான கட்டிட அமைப்புகள், தவறான குறுகலான வீதி அமைப்புகள், காற்றோட்ட வசதியில்லாமை, வெளிச் சமின்மை, சுகாதார வசதிகள் இல்லாமை, இக்காரணிகள் தனித்தோ, கூட்டாகவோ பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சமூக ஒழுக்கத்திற்கு கெடுதி யாக (பீமீtக்ஷீவீனீமீஸீtணீறீ) உள்ளது.

இந்த சேரிகளில் கட்டப்பட்டுள்ள வீடுகள் அனைத்தும் குறுகலான சந்து அமைப்புகளுடனும், 10/10 அடி அல்லது அதற்கும் குறைவாக அளவு கொண்ட ஒற்றை அறை கொண்டதாகவும் இருக்கிறது. தலித்மக்கள் அதிலும் குறிப்பாக அருந்தியினர் இடப்பற்றாக்குறை காரணமாக கூட்டு குடும்ப முறைப்படி வாழ வேண்டிய நிர்பந்தம் உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது 10 தலித்துகள் வசித்து வருகின்றனர்.

குடியிருப்பு வசதிகள் போதாமை காரணத்தால் தாழ்த்தப்பட்டோர் அல்லாத சேரிவாழ் மக்களும் துயர் அடைகின்றனர். சேரிகளுக்கு வெளியே தாழ்த்தப்பட்டோர் குடி யேறுவதில் மற்றுமோர் சிக்கல் உள்ளது. தலித் அல்லாத மக்கள் தலித்துகளுக்கு வீடு விற்கவோ, வாடகைக்கு தரவோ மறுக்கின்றனர். சொத்து வர்த்தகத்தின் (ஸிமீணீறீ ணிstணீtமீ) காரணமாக நிலமதிப்பு தாறுமாறாக எகிறியிருப்பதால் தலித்துகள் நன்கு தரமான வீடு களை வாங்க முடிவதில்லை. அவர்களது குடியிருப்புகளின் சந்தை மதிப்பு அடுத்துள்ள தலித் அல்லாதவர்களின் குடியிருப்புகளின் சந்தை மதிப்புக்கு இணையாக இல்லை என்கிறார். அனைந்திந்திய காப்பீட்டு தொழிலாளர் கழகத்தின் தென் மண்டல பிரிவின் பொதுச் செயலாளர் கே. சுவாமிநாதன்.

மஞ்சள் மேடு, மேல பொன்னகரம், மினிகாலனி, சுப்ரமணியபுரம், கீழ் மதுரை, அனுப்பாமை, கரும்பாலை, விராட்டிபத்து மற்றும் அரசரடி பகுதிகளில் உள்ள தலித்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட ஒருங் கிணைப்பாளரும், மதுரை முனி சிப்பல் மாநகராட்சி சுகாதாரப் பணியாளர் ஒன்றியத்தின் பொதுச் செயலாருமான ஆர்.ராஜகோபால்.

கரும்பாலை சேரியில் 2000 வீடுகள் இருக்கின்றன. ஒரு சில வீடுகள் தவிர மற்றவற்றிக்கு பட்டா வழங்கப்படவில்லை. 30 வருடங் களுக்கு மேலாகவே அவர்கள் அங்கு வசித்து வருகிறார்கள். கழிவு நீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ள போதும் தனித்தனியாக வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்படாத காரணத்தால் சாக் கடை நீக்கம் திட்டத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. கடன்களை முறையாக செலுத்தாத காரணத்தால் சேரி ஒழிப்பு வாரிய அதிகாரிகள் இன்றும் பட்டா வழங்காமல் உள்ளனர்.

கோமேஸ்பாளையம் பகுதியில் இருந்து துணைமேயர் வந்திருக்கிறார். எனினும் மற்ற சேரிப்பகுதிகளில் இன்னும் முன்னேற்றம் எதுவும் அடைந்திடவில்லை. மாநகராட்சி கழிவறைகளை கட்டிவந்த போதிலும், தண்ணீர் வசதி இல்லாத காரணத்தால் கட்டிட பணிகளை நிறுத்தியுள்ளது. அதிகாலை 5 மணி முதல் 7 மணிக்குள் குடிநீர் வரத்து நின்றுவிடும். திறந்த வெளி சாக்கடைகள் காரணமாக எப்பொழுதும் வீட்டை சுற்றிலும் சகதி கள் காணப்படும்.

சேரி ஒழிப்பு வாரியம் (slum clearence board) தங்களுக்கு புதிதாக வீடுகள் கட்டி கொடுக்கும் என்பதில் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். திடீர் நகரில் தலித்துகளை குடியமர்த்த 240 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை ஒதுக்கீடு செய்வதிலும் குழப்பம் நிலவுகிறது. திடீர் நகரில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட மக்களுக்கு வில்லாபுரத்தில் தற்காலிக தங்குமிடம் வழங்கப்பட்டிருக்கிறது. கிருதம்மாள் நதிக்கு அருகில் உள்ளது கீராநகர். மேலவாசல் பகுதியில் உள்ள பெரிய கழிவு நீர்கால்வாய் பயங்கரமானது. இந்த கால்வாயின் மற்றொரு புரம் நகர்புற கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதன் துர்நாற்றங்களை (stக்ஷீமீநீலீ) சகித்துக் கொள்வதை தவிர இங்கு வசிப்போருக்கு வேறு வழியில்லை. வெள்ளப்பெருக்கை தடுக்க கால்வாய் ஒட்டி சுவர் எழுப்பும் திட்டத்தை அதிகாரிகள் இன்னும் தொடங்கவே இல்லை. இந்த வார்டின் ஒரு பகுதியான சுப்ரமணியபுரம். மேயர் இப்பகுதியில் இருந்து தான் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும் இதன் நிலைமையும் மிக மோசமாக இருக்கிறது. இங்கு 450 வீடுகள் பட்டாவுக்காக காத்திருக்கின்றன.

மதுரை முனிசிபல் மாநகராட்சி காலனியில் 1500&க்கும் மேலான மக்கள் வசிக்கின்றனர். சுகாதாரப் பணியாளர் களுக்காக மிகச்சிறிய பகுதியில் 90 வீடுகள் மட்டும் கட்டப்பட்டுள்ளன. தண்டல்காரன்பட்டி சேரிப்பகுதியில் திறந்தவெளி கழிவு நீர் கால்வாயும், அழுகிய வீண் பொருள்களின் குவியல்களும் இங்குள்ள வாழ்க்கைச் சூழலை சிக்கலுக்குள்ளாக்குகிறது.

நகர்மயமாதலில் 15 பெரிய மாநிலங்களில் தமிழ்நாடுதான் முதலிடம் வசிக்கிறது. சரிகாணப்படாத, தீவிரமான நகர்மயமாக்குதலால் மாசு படுதல், உபகரணங்கள், இடங்கள் தேவைப்படுவதன் சவால்களை மாநகராட்சி நிர்வாகம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்கின்றனர் நிபுணர் கள்.    மதுரையின் நகர்மயமாதலின் எதிர்விளைவுகளை தலித்கள் மற்றும் பொதுவான சேரிவாழ் மக்கள் சுமக்க வேண்டியுள்ளது.

தினந்தோறும் மதுரையில் 450 டன்கள் கழிவு பொருட்கள் சேகரமாகின்றன.

தலித் அல்லாதவர்கள் சுகாதாரப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர்களுக்கு அலுவலக உதவி யாளர்கள் போன்ற பணிகள் கொடுக்கப் படுகின்றன. சில டீ கடைகளில் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி குவளைகளில் (ஜீறீணீstவீநீ நீuஜீs) சுகாதாரப் பணியாளர்களுக்கு டீ கொடுக்கப்படுகின்றது என்று குற்றம் சாட்டுகிறார் ராஜகோபால்.

தலித்துகளுக்கு கடன்கள் மற்றும் நிதியுதவிகள் வழங்க தமிழ்நாடு ஆதிதிராவிடர் குடிமனை மற்றும் மேம்பாட்டு கழகம் பல்வேறு முன்நிபந்தனைகளை விதிப்பதன் காரணமாக அம்மக்கள் தனியார் கடன் தருவோரிடம் செல்ல நேர்கிறது. அவர்கள் அதிகளவு வட்டி வசூலிக்கின்றனர். கடனை திருப்பிச் செலுத்தாத போது தலித் பெண்கள் துன்பத்துக்கு ஆளாக்கப்படுகின்றனர். வட்டிக்காரர் களின் கரங்களில் சிக்கிபாலியல் தொந்தரவுக்கும் ஆளாகின்றனர். தலித்களின் நலன்களை மேம்படுத்த செயல்படுத்தப் படும் திட்டங்களை சரியாக கண் காணிக்க வேண்டும் அவர்களது வசிப்பிடங்களின் உள்கட்டு மானங் களை மேம்படுத்த வேண்டும் என்கிறார் ராஜகோபால்.

தலித்துகளின் மிக முக்கியமான மற்றுமொரு பிரச்சினை கல்வி. படிப்பை பாதியில் நிறுத்தும் தலித் சமூக குழந்தைகள் எண்ணிக்கை அதிகம். இதுவே அருந்ததியர் சமூகத்தில் எண்ணிக்கை இன்னும் கூடுதலாகும். அவர்களது பெற்றோர்கள் இடையறாது பணிக்கு செல்வதே காரணம். 96 சதவீத அருந்ததியின் குழந்தை கள் மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்கப்படுவதாக அன்னை தெரஸா கிராமப்புற வளர்ச்சி அறக்கட்டளை (கிஜிஸிஞிஜி) மேற்கண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த எண்ணிக்கை ஐந்தாம் வகுப்பில் 60 சதவீதமாகவும், எட்டாம் வகுப்பில் 45 சதவீதமாகவும் குறைகிறது. 20சதவீதத்திற்கு மேல் அருந்ததியர் குழந்தைகள் பத்தாம் வகுப்பை தாண்டுவதில்லை. மிகச் சிறிய அளவு சதவீதத்தினரே இந்த சமூகத்தில் மேற்கொண்டு படிக்கின் றனர். பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து கல்லூரிக்குப் போகின்றனர். குடும்பத்தில் வருவாய் ஈட்டுவோரின் திடீர் மரணமும் அக்குழந்தைகள் உடனடியாக படிப்பை கைவிட நேர்கிறது.

அருந்ததி சமூகத்தினர் தினப் பணிகளுக்காக அதிகாலை 5 மணிக்கே வீட்டைவிட்டு செல்ல நேர்வதால் தங்கள் குழந்தைகளின் கல்வி விசயத்தில் அக்கறை காட்ட முடிவதில்லை. இதன் காரணமாகவே, சுகாதாரப்பணியாளர்களுக்கு ஷிப்டு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெற்றோர்களில் ஒருவர் வீட்டில் இருந்து குழந்தைகளின் கல்வியை கவனிக்க முடியும்.

பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றாலும் பெரிய அளவில் நிதி தேவைப்படுவதால் அருந்ததியர் பிள்ளைகள் கல்லூரி வாசல்களை தாண்ட முடிவதில்லை. குறிப்பாக தனியார் கல்லூரிகளில் அவர்களால் சேர முடிவதில்லை. மதுரை மாநகரின் தலித் மக்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தொடர்ச்சியான பிரச்சாரங்களை நடத்த இருக்கிறது. இந்த சமூகத்தின் மாணவர்களுக்கு உதவும் வகையில் அவர்கள் பயிலும் பள்ளிகளுக்கு அருகில் பயிற்சி முகாம் களை நடத்த இருக்கிறது.

தொடர்ந்து 5 நூற்றாண்டுகளுக்கும் மேலாக தாழ்த்தப்பட்டு, ஒடுக்கப்பட்டு, இழிவுக்கு ஆளாக்கப்பட்டுள்ள சமூகத்தை மேம்படுத்த அனைத்து சமூகத்தினரும் அக்கறை காட்ட வேண்டும். அரசும் பாரபட்சமற்ற வகையில் அருந்ததியினர் சமூக மேம்பாட்டுக்கு ஆவண செய்ய வேண்டும்.