தலித் வாலிபரை அடித்ததாக உ.பி. முன்னாள் அமைச்சர் மீது வழக்குப் பதிவு

ஓரை (உத்தரபிரதேசம்), மார்ச் 3 -

தலித் வாலிபரை அடித்ததற்காக பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் எம்.எல்.ஏ.வும் உத்தரபிரதேச மாநில முன்னாள் அமைச்சருமான ஹரிஓம் உபாத்யாய் மீதும், அவருடைய நண்பர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ப்ஹூல் சிங் என்பவர் ராம்பூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த புகாரில்- உத்தரபிரதேச மாநில முன்னாள் உள்துறை அமைச்சருமான ஹரிஓம் மற்றும் அவருக்கு நெருங்கியவர்க்களுமான யோகேஷ் திவிவேதி மற்றும் அருண் திக்ஷி ஆகியோர் நேற்று இரவு தன்னை தாக்கினார்கள் என்றும் தன்னுடைய மதத்தைப் பற்றி இழிவாகப் பேசினார்கள் என்றும் குறிப்பிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே, குற்ற நடவடிக்கைகளுக்காக மாநில அமைச்சரவையிலிருந்து கடந்த ஆண்டு உபாத்யாய் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.